India
"மோடி அரசால் கடுமையாக உயரப்போகும் உணவுப் பொருட்கள் விலை" : காரணம் என்ன?
இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வருகிறது. அதேபோல் வரலாறு காணாத வகையில் முதல்முறையாக டீசல் விலையும் 100 ரூபாயைத் தாண்டிவிட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வரும் அதேவேளையில் சிலிண்டர் விலையும் அதிரடியாக உயர்ந்து வருவது ஏழை, எளிய மக்களை மூச்சு விடமுடியாமல் திணறச் செய்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.710ஆக இருந்தது. பின்னர் பிப்ரவரி மாதத்தில் மூன்று முறை விலை உயர்த்தப்பட்டதால் 100 ரூபாய் கூடுதலாக விலை உயர்ந்தது. இதையடுத்து மார்ச் மாதத்தில் ரூ.25 உயர்த்தப்பட்டது.
பின்னர் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களும் தலா மூன்று முறை ரூ.25 விலை உயர்ந்தது. இதனால் செப்டம்பர் மாதத்தில் சிலிண்டர் விலை அதிரடியாக ரூ.900.50க்கு உயர்ந்தது. இந்நிலையில் நவம்பர் மாதத்திற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விலை உயரவில்லை. ஆனால், வர்த்தக சிலிண்டர் விலை ரூ.268 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.2133க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் உணவுப் பொருட்களின் விலை அதிரடியாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!