India
மீண்டும் உயர்கிறது கேஸ் விலை? சாமானிய மக்களை நட்டாற்றில் விடப்போகிறாரா பிரதமர் மோடி?
பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் அதன் விலை 900 முதல் 1000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சிலிண்டருக்கு 300 ரூபாய் வரை வழங்கப்பட்டு வந்த மானியம் தற்போது 24 ரூபாயாக் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் நடுத்தட்டு மக்கள், ஏழைகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். வருமானத்தில் பெரும்பகுதியை சிலிண்டருக்கு செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு நாடு முழவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதனை சமாளிக்க தற்போது ரேஷன் கடைகள் மூலம் சிறிய வகை சிலிண்டரான 5 கிலோ சிலிண்டரை விற்பனை செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எண்ணெய் நிறுவனங்களைக் அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக ஒன்றிய உணவுத்துறை செயலாளர் சுதான்சு பாண்டே தெரிவித்துள்ளார்.
மாநில அரசுகள் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிலிண்டர் விலையை மேலும் உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன. 6 முறை சிலிண்டர் விலையை உயர்த்திய பின்னரும் 100 ரூபாய் நஷ்டத்தில்தான் சிலிண்டர்கள் விற்கப்படுவதாக நிறுவனங்கள் கூறியுள்ளன.
இதனை ஈடு கட்ட மேலும் சிலிண்டர் விலையை உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசு அனுமதி அளித்தால் அடுத்த வாரம் மீண்டும் விலை உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“அதிமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை.. இவரே போதும்..” எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த கருணாஸ்!
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!