India
“இரட்டை குழந்தைகளை கிணற்றில் வீசிவிட்டு, தாயும் தற்கொலை முயற்சி”: தாயின் இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம்?
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாதாபுறத்தைச் சேர்ந்தவர் ராஃபிக். இவரது மனைவி சுபீனா. இந்த தம்பதிக்கு மூன்றரை வயதில் இரட்டை குழந்தைகள் இருந்தன. இந்நிலையில், சுபீனா திடீரென தனது இரண்டு குழந்தைகளையும் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் வீசியுள்ளார்.
பிறகு உறவினர்களுக்கு போன் செய்து நான் குழந்தைகளைக் கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டதாகவும், தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது சுபீனா உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். பிறகு அவரை தீயணைப்புத்துறை உதவியுடன் மீட்டனர். ஆனால் ,அவரின் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தைகளைக் கிணற்றில் வீசி கொலை செய்த தாய் சுபீனாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் ஏன் அவர் குழந்தைகளைக் கிணற்றில் வீசினார் என்பது குறித்து அவரது கணவரிடமும், உறவினர்களிடமும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!