India
“இரட்டை குழந்தைகளை கிணற்றில் வீசிவிட்டு, தாயும் தற்கொலை முயற்சி”: தாயின் இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம்?
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாதாபுறத்தைச் சேர்ந்தவர் ராஃபிக். இவரது மனைவி சுபீனா. இந்த தம்பதிக்கு மூன்றரை வயதில் இரட்டை குழந்தைகள் இருந்தன. இந்நிலையில், சுபீனா திடீரென தனது இரண்டு குழந்தைகளையும் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் வீசியுள்ளார்.
பிறகு உறவினர்களுக்கு போன் செய்து நான் குழந்தைகளைக் கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டதாகவும், தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது சுபீனா உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். பிறகு அவரை தீயணைப்புத்துறை உதவியுடன் மீட்டனர். ஆனால் ,அவரின் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தைகளைக் கிணற்றில் வீசி கொலை செய்த தாய் சுபீனாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் ஏன் அவர் குழந்தைகளைக் கிணற்றில் வீசினார் என்பது குறித்து அவரது கணவரிடமும், உறவினர்களிடமும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!