India
சிறுவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி பணம்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் - நடந்தது என்ன?
பீகாரில் வங்கி தவறுதலாக டெபாசிட் செய்த ரூ.5 லட்சம் பணத்தை திருப்பி வழங்க கிராமவாசி மறுப்பு தெரிவித்து அந்தப் பணம் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்த 15 லட்சத்தின் முதல் தவணை என நினைத்து செலவழித்துவிட்டதாக கூறியதால் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்த செய்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதே பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்கில் 900 கோடி ரூபாய் பணம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் கட்ஹார் மாவட்டம் பாஸ்டியா பகுதியைச் சேர்ந்தவர்கள் குருசந்திர விஸ்வாஸ் மற்றும் அஷிஷ்ட் குமார். உயர்நிலை வகுப்பில் பயிலும் பள்ளி மாணவர்கள் இருவரும் தங்கள் பள்ளியில் சீருடைக்கு அரசு அனுப்பிய பணத்தைச் சரிபார்க்க அருகில் இருந்த வங்கிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது அவர்களது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைப் பார்த்து வங்கி ஊழியர் அதிர்ச்சி அடைத்துள்ளார். அதற்குக் காரணம், அந்த மாணவர்களின் வங்கி கணக்கில் சுமார் 960 கோடி ரூபாய் பணம் இருந்துள்ளது. அதில் விஸ்வாஸ் வங்கிக் கணக்கில் 60 கோடியும், அஷிஷ்ட் குமார் வங்கிக் கணக்கில் 900 கோடி ரூபாயும் இருந்துள்ளது. இதனையடுத்து வங்கி மேலாளர் அந்த பணத்தை எடுக்கமுடியாதபடி முடக்கியுள்ளார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Also Read
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
தீபாவளி பண்டிகை : சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் - கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்!