India
Swiggy, Zomato-வில் இனி உணவுப் பொருட்களின் விலை உயரும்.. ஒன்றிய அரசின் முடிவால் பொதுமக்களுக்கு பாதிப்பு!
இந்தியாவில் உணவுப் பொருட்களுக்கு ஏற்கனவே ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களை ஜி.எஸ்.டி வரியின் கீழ் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாளை நடைபெற உள்ள ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் இதுசம்பந்தமான முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்கனவே ஜி.எஸ்.டி வரி உள்ளது. ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களும் இணையதள வர்த்தக ரீதியில்தான் இந்தப் பணிகளைச் செய்து வருகின்றனர். எனவே அதன் அடிப்படையில் இந்த நிறுவனங்களையும் ஜி.எஸ்.டி வரியின் கீழ் கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை ஜி.எஸ்.டி வரம்புக்குள் உணவு டெலிவரி நிறுவனங்களையும் கொண்டுவந்துவிட்டால் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயருவதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய தயாரிப்புகளின் விற்பனையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்தும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Also Read
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!
-
ரேபிஸ் மரணங்களுக்கு தீர்வு என்ன? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!
-
“கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!