India
“நீட் தேர்வு வினாத்தாள் லீக்?” : மாணவர்கள் அதிர்ச்சி - சி.பி.ஐ விசாரணை தேவை என கொந்தளிப்பு!
நாடு முழுவதும் இன்று முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளதாக வெளியான தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு நாளை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்வுக்கான இறுதிக்கட்ட தயாரிப்புகளில் மாணவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வுக்கான வினாத்தாள் டெலகிராம் உள்ளிட்ட சமூக ஊடக செயலிகளின் வாயிலாக கசிந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், சில டெலகிராம் குழுக்களில் தேர்வு தொடங்குவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாக வினாத்தாள் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆனால், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் தகவல் உண்மையல்ல என்றும், இதுபோன்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பலரும் #OperationNeet, #CBIForNEET ஆகிய ஹேஷ்டேக்குகளில் நீட் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்துள்ளன.
Also Read
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!