India
ஆந்திராவில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை வெளுத்தெடுத்த உறவினர்கள் !
ஆந்திர மாநிலம், ஒட்டிசெரு கிராமத்தில் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், தன்னிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொள்வதாகத் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளிக்குச் சென்று மாணவி கூறிய ஆசிரியரை திடீரென கடுமையாகத் தாக்கினர். அப்போது அவர்களிடம் அந்த ஆசிரியர் நான் மனைவியிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என முறையிட்டார்.
மேலும் மாணவியைச் சரியாகப் படிக்கவில்லை என்பதால் நான் அவரை கண்டித்தேன் என கூறினார். ஆனால், அவர்கள் அதைப்பற்றியும் கேட்காமல் ஆசிரியரைக் கடுமையாகத் தாக்கினர். அப்போது தடுக்க வந்த மற்ற ஆசிரியர்களையும் மாணவியின் உறவினர்கள் தாக்கினர்.
இந்த சம்பவத்ததால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வு குறித்து அறிந்த போலிஸார் பள்ளிக்கு வந்து இருதரப்பினரையும் தடுத்து நிறுத்தினர். பிறகு மாணவியிடமும், ஆசிரியரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!
-
“VB G RAM G மசோதா என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம்!”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!