India
ஆந்திராவில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை வெளுத்தெடுத்த உறவினர்கள் !
ஆந்திர மாநிலம், ஒட்டிசெரு கிராமத்தில் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், தன்னிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொள்வதாகத் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளிக்குச் சென்று மாணவி கூறிய ஆசிரியரை திடீரென கடுமையாகத் தாக்கினர். அப்போது அவர்களிடம் அந்த ஆசிரியர் நான் மனைவியிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என முறையிட்டார்.
மேலும் மாணவியைச் சரியாகப் படிக்கவில்லை என்பதால் நான் அவரை கண்டித்தேன் என கூறினார். ஆனால், அவர்கள் அதைப்பற்றியும் கேட்காமல் ஆசிரியரைக் கடுமையாகத் தாக்கினர். அப்போது தடுக்க வந்த மற்ற ஆசிரியர்களையும் மாணவியின் உறவினர்கள் தாக்கினர்.
இந்த சம்பவத்ததால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வு குறித்து அறிந்த போலிஸார் பள்ளிக்கு வந்து இருதரப்பினரையும் தடுத்து நிறுத்தினர். பிறகு மாணவியிடமும், ஆசிரியரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“Online, Offline இண்டிலும் தி.மு.க தான் Lion என்று காட்டுவோம்!” : IT Wing கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!