India
“இனி விடுமுறை நாட்களிலும் சம்பளம் பெறலாம்” - விதிகளை மாற்றிய RBI : என்னென்ன மாற்றங்கள்?
இந்தியாவில் விடுமுறை நாட்களில் வங்கி வாயிலாக முக்கியமான பணப் பரிமாற்றங்களைச் செய்ய முடியாது. குறிப்பாக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை நாட்களின்போது அவர்களின் சம்பளத்தை கிரெடிட் செய்ய முடியாது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் விதிமுறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து விடுமுறை நாட்களிலும் சம்பளத்தை கிரெடிட் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ் எனப்படும் பணப்பரிமாற்ற முறையில் 24 மணி நேரமும் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இனி நிறுவனங்கள் சனி, ஞாயிறு, பண்டிகை விடுமுறை நாட்களிலும் கூட வங்கிகளில் சம்பளம் கிரெடிட் செய்ய முடியும்.
அதேபோல வங்கிக் கடன்களுக்கான இ.எம்.ஐ தொகையையும் இனிமேல் விடுமுறை நாட்களில் டெபிட் செய்வதற்கும் இதன் மூலம் அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Also Read
-
எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!
-
குறைதீர் முகாமில் தவெக அமைச்சர் ரமேஷ் முன் அடாவடி.. கேள்வி கேட்டவர் ஃபோனை பிடிங்கி விரட்டியடிப்பு!
-
‘வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம்.. தவெக அமைச்சர்கள் மீது DVAC-க்கு பறந்த புகார் மனு’ : திமுக அதிரடி!
-
துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி… பாஜக-வுக்கு பணியும் தவெக : திமுக எம்.பி. வில்சன் கண்டனம்!
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?