India
“இனி விடுமுறை நாட்களிலும் சம்பளம் பெறலாம்” - விதிகளை மாற்றிய RBI : என்னென்ன மாற்றங்கள்?
இந்தியாவில் விடுமுறை நாட்களில் வங்கி வாயிலாக முக்கியமான பணப் பரிமாற்றங்களைச் செய்ய முடியாது. குறிப்பாக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை நாட்களின்போது அவர்களின் சம்பளத்தை கிரெடிட் செய்ய முடியாது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் விதிமுறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து விடுமுறை நாட்களிலும் சம்பளத்தை கிரெடிட் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ் எனப்படும் பணப்பரிமாற்ற முறையில் 24 மணி நேரமும் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இனி நிறுவனங்கள் சனி, ஞாயிறு, பண்டிகை விடுமுறை நாட்களிலும் கூட வங்கிகளில் சம்பளம் கிரெடிட் செய்ய முடியும்.
அதேபோல வங்கிக் கடன்களுக்கான இ.எம்.ஐ தொகையையும் இனிமேல் விடுமுறை நாட்களில் டெபிட் செய்வதற்கும் இதன் மூலம் அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Also Read
-
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் : தேர்வு குழுவினருக்கு பதிலடி கொடுத்த நடராஜன் !
-
ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணியில் பிளவு? : பிரதமர் மோடியின் பேச்சால் வந்த சிக்கல்!
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!