India
“எங்களை விமர்சிச்சா செய்தி போடுறீங்க..?” : கொரோனா அவலங்களை வெளியிட்டதால் ஐ.டி ரெய்டை ஏவிய மோடி அரசு!
பிரபல பத்திரிகை குழுமமான டைனிக் பாஸ்கர் அலுவலகங்களிலும் அதன் உரிமையாளர் சுதிர் அகர்வாலின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
டைனிக் பாஸ்கர் பத்திரிகை குழுமம், இந்தி, குஜராத்தி, மராத்தி, ராஜஸ்தானி ஆகிய மொழிகளில் பத்திரிகைகளை நடத்தி வருகிறது. இதற்கு போபால், டெல்லி, இந்தூர், ஜெய்ப்பூர், ஆமதாபா, மும்பை உள்ளிட்ட இடங்களில் அலுவலகங்கள் உள்ளன.
இந்நிலையில், டைனிக் பாஸ்கர் பத்திரிகை அலுவலககங்களிலும் உரிமையாளர்கள் வீடுகளிலும் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
நூற்றுக்கு மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகளும் ஆயத்தீர்வை துறை அதிகாரிகளும் குழுக்களாகப் பிரிந்து சென்று எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனையைத் தொடங்கினர்.
டைனிக் பாஸ்கர் குழுமம் வருமான வரி ஏய்ப்பு செய்து வருவதாக தங்களுக்கு தகவல் வந்த காரணத்தினால் சோதனைகளை மேற்கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், கொரோனா இரண்டாம் பேரலையின்போது ஒன்றிய மோடி அரசின் செயல்பாடுகளை டைனிக் பாஸ்கர் குழுமப் பத்திரிக்கைகள் கடுமையாக விமர்சித்து வந்ததாலேயே அரசின் உத்தரவோடு இந்த சோதனை நடக்கிறது எனக் குற்றம்சாட்டப்படுகிறது.
“கொரோனாவால் பலியானவர்களின் உடல்கள் கங்கை நதியில் மிதந்தது குறித்து செய்திகளை வெளியிட்டு பா.ஜ.க அரசை அம்பலப்படுத்தியதன் காரணமாகவே எங்கள் மீது பா.ஜ.க அரசு ரெய்டு நடவடிக்கையை ஏவியுள்ளது” என டைனிக் பாஸ்கர் பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “பத்திரிகை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது ஆபத்தான போக்கு; கண்டனத்துக்குரியது.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!