India
3வது அலையின் ஆரம்பகட்டத்தை எட்டியதா இந்தியா? புதிய சறுக்கல் மூலம் எச்சரிக்கை மணி அடிக்கும் கொரோனா!
உலகம் முழுவதும் 19 கோடி பேரை கொரோனா பெருந்தொற்று தாக்கியுள்ள நிலையில், மூன்றாவது அலை ஆரம்ப கட்டத்தை எட்டியதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் தடுப்பூசி போடும் வேகம் போதாது என்று யு.பி.எஸ். செக்யூரிட்டீஸ் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.
மரபணு வரிசை முறையை கண்காணித்து வரும் இந்திய கொரோனா மரபியல் கூட்டமைப்பான "இன்சாகாக்" வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் இதுவரை 230 வகையான கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த உருமாறிய தொற்றுகள் யாவும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பவை அல்ல. சில உருமாறிய தொற்றுகள்தான் ஆபத்தானவை என்று கூறியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக உருமாறிய வைரசின் இரண்டு வகை டெல்டா வைரஸ்கள் கண்டறியப்பட்டன. ஆனால், தற்போது “A.Y.-3” என்ற மற்றொரு உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்டா வைரசின் மூன்று வகைகளும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த 125 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்று நிதி ஆயோக் உறுப்பினர் மருத்து வர் வி.கே.பால் எச்சரித்துள்ளார். இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதில் புதிய சறுக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இது ஒரு எச்சரிக்கை அறிகுறி என்றும் வி.கே.பால் குறிப்பிட்டுள்ளார்
Also Read
-
“அதிமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை.. இவரே போதும்..” எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த கருணாஸ்!
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!