India
3வது அலையின் ஆரம்பகட்டத்தை எட்டியதா இந்தியா? புதிய சறுக்கல் மூலம் எச்சரிக்கை மணி அடிக்கும் கொரோனா!
உலகம் முழுவதும் 19 கோடி பேரை கொரோனா பெருந்தொற்று தாக்கியுள்ள நிலையில், மூன்றாவது அலை ஆரம்ப கட்டத்தை எட்டியதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் தடுப்பூசி போடும் வேகம் போதாது என்று யு.பி.எஸ். செக்யூரிட்டீஸ் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.
மரபணு வரிசை முறையை கண்காணித்து வரும் இந்திய கொரோனா மரபியல் கூட்டமைப்பான "இன்சாகாக்" வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் இதுவரை 230 வகையான கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த உருமாறிய தொற்றுகள் யாவும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பவை அல்ல. சில உருமாறிய தொற்றுகள்தான் ஆபத்தானவை என்று கூறியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக உருமாறிய வைரசின் இரண்டு வகை டெல்டா வைரஸ்கள் கண்டறியப்பட்டன. ஆனால், தற்போது “A.Y.-3” என்ற மற்றொரு உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்டா வைரசின் மூன்று வகைகளும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த 125 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்று நிதி ஆயோக் உறுப்பினர் மருத்து வர் வி.கே.பால் எச்சரித்துள்ளார். இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதில் புதிய சறுக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இது ஒரு எச்சரிக்கை அறிகுறி என்றும் வி.கே.பால் குறிப்பிட்டுள்ளார்
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!