India
“தமிழ்நாட்டின் நலன் மீது பா.ஜ.க தலைவர்களுக்கு அக்கறை இல்லை” : டி.ஆர்.பாலு எம்.பி சாடல்!
தடுப்பூசி ஒதுக்கீடு தொடர்பாக, தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இன்று டெல்லியில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலை நேரில் சந்தித்துப் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி, “தமிழ்நாட்டுக்கு 12 கோடி டோஸ் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. ஜூலை மாதத்துக்கு 50 லட்சம் தடுப்பூசி தருவதாகக் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் தடுப்பூசித் தட்டுப்பாடு நிலவும்போது தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்கள் ஏன் ஒன்றிய அரசை வலியுறுத்தவில்லை? தமிழ்நாட்டின் நலன் மீது பா.ஜ.க தலைவர்களுக்கு அக்கறை இல்லை.
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தொடங்கத் தயாராக உள்ளோம். மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசின் கதவைத் தட்ட வேண்டியுள்ளது. 90% தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும் 10% தடுப்பூசிகளைத் தனியாருக்கும் வழங்க வேண்டும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அதிக தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
ஒன்றிய அரசின் தடுப்பூசி கொள்கையில் வெளிப்படைத் தன்மையில்லை. ரேசன் கடையில் அரிசி வாங்குவது போல ஒன்றிய அரசிடம் தடுப்பூசி வாங்கும் நிலை உள்ளது. ரூ.20,000 கோடிக்கு நாடாளுமன்ற புதிய வளாகம் காட்டும் ஒன்றிய அரசு, அந்தப் பணத்தை தடுப்பூசிக்கு செலவிடலாம்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!