India
“கொரோனா மூன்றாம் அலையை தவிர்க்க முடியாது; அடுத்த 6 - 8 வாரங்களில் துவங்கும்” - எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அடுத்த 6 அல்லது 8 வாரங்களில் கொரோனா மூன்றாம் அலை துவங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “கொரோனா மூன்றாம் அலை நமது நாட்டில் தவிர்க்க முடியாததாகி விட்டது. அடுத்த 6 அல்லது 8 வாரங்களில் மூன்றாம் அலை துவங்கும். மூன்றாம் அலை துவங்க இன்னும் சிறிது நாட்கள் கூட ஆகலாம். இது நாம் எப்படி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது.
முதல் மற்றும் இரண்டாவது அலையில் நாம் பாடம் கற்றுக்கொண்டது போல் தெரியவில்லை. மக்கள் மீண்டும் கூட்டமாகக் கூடுகின்றனர். இதனால், அடுத்த சில நாட்களில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தேசிய அளவில் அதிகரிக்கக்கூடும்.
ஒரு அலை உருவாக, பொதுவாக 3 மாதங்கள் ஆகும். ஆனால், பல காரணிகளை பொறுத்து குறைந்த காலத்திலும் அந்த அலை உருவாகலாம். கொரோனா நடைமுறைகளை தாண்டி, தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
கடந்த முறை, புதிய உருமாறிய வைரஸ், வெளியில் இருந்து வந்து இங்கு பரவியது. இதனால், அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உருமாறிய வைரஸ் தொடர்ந்து இருக்கத்தான் செய்யும். தடுப்பூசி போடாவிட்டால், நாம் எளிதில் பாதிக்கப்படுவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தமது படைப்புகளால் தொடர்ந்து வாழ்வார்” - ‘பாக்யராஜ் 50’ விழாவை குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் உருக்கம்!
-
“மின் துறை வெள்ளை அறிக்கையா அது நொள்ளை அறிக்கை.. குற்றம் சொல்லி காலத்தை கடத்தாதீர்கள்” : முரசொலி காட்டம்!
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
-
வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!