India
“கும்பமேளா தவறில் இருந்து பாடம் கற்கவில்லையா?” : உத்தரகாண்ட் பா.ஜ.க அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகம் எடுத்த நேரத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கும்பமேளா திருவிழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டர்.
இந்தியா முழுவதும் கொரோனா பரவலுக்கு இந்த விழாவும் ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில், உத்தரகாண்ட் அரசு சார் தாம் யாத்திரை நிகழ்வை முன்னட்டு பத்ரிநாத், கேதார்நாத் புனித தளங்களை திறக்க அனுமதி அளித்துள்ளது.
இதனால் இப்பகுதியில் கூட்டமாக சுற்றித்திரியும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை அடிப்படையாக கொண்டு உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில், “கும்பமேளாவில் செய்த அதே தவறை சார் தாம் யாத்திரையிலும் அரசு செய்வது தவறானது.
மேலும் இது கண்டிக்க கூடிய செயலாகும். மேலும், கொரோனா பாதிப்புகளை பார்த்து உத்தரகாண்ட் ஏன் பாடம் கற்றுக்கொள்ளவில்லை? உத்தரகாண்ட் அரசு நீதிமன்றத்தை முட்டாள் ஆக்கலாம், ஆனால் மக்களை முட்டாளாக முடியாது” என நீதிபதிகள் கண்டம் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல் வேலைவாய்ப்பு வரை... முதலீடுகள் செயலாக்க மாநாட்டில் நிகழ்ந்தது என்ன?