India
“காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர வேண்டும்”: ராஜ்நாத் சிங்-கிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கடலோர பகுதியில் சமீபத்தில் காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்டுத்தர கோரி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை இன்று (21.5.21) கழக பொருளாளரும், நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து ஒரு கடிதம் அளித்துள்ளார்.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒன்பது தமிழக மீனவர்கள் லட்சத் தீவு அருகில் படகுக் கோளாறினால் காணாமல் போனதை அடுத்து அவர்களை மத்திய கடலோர காவல் படையினரின் உதவியுடன் உடனடியாக மீட்டுத்தர வேண்டுமென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கடந்த 16ம் தேதியன்று கடிதம் எழுதியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து முதல்வரின் அறிவுறுத்தலின்படி இன்று கழக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர ஆவன செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது மத்திய அமைச்சர் அவர்கள் உடனடியாக தமிழக மீனவர்களை தேடும் பணியை துரிதப்படுத்த கடலோர காவல் படையினரின் தலைமை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிப்பத்து தேடுல் பணியை துரிதப்படுத்தபடும் என்று தமிழக முதல்வர் அவர்களிடம் தெரிவிக்குமாறும் டி.ஆர்.பாலு அவர்களிடம் கூறியுள்ளார்.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!