India
85% பேருக்கு லேசான கொரோனா பாதிப்புதான்; பீதியடைய வேண்டாம் - டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் வேண்டுகோள்!
கொரோனாவை பொறுத்தவரை, 85 சதவீதம் பேருக்கு லேசான பாதிப்புதான் ஏற்படும். இது குறித்து பேசிய டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா, மக்களிடையே இப்போது தேவையற்ற பீதி காணப்படுகிறது என்றும் இதில் நன்மையை விட தீமையே அதிகம் என்றும் கூறினார்.
கொரோனா தாக்கிய ஒருவருக்கு ஆக்சிஜன் அளவு இயல்பாக இருந்தாலும், லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தாலும் உடனே மருத்துவமனைகளில் சேருவதையே விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், மருத்துவமனைகள் நிரம்பி, தீவிர நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் போவதாக அவர் தெரிவித்தார். கொரோனாவை பொறுத்தவரை, 85 சதவீதம் பேருக்கு லேசான பாதிப்புதான் ஏற்படும் என்றும், காய்ச்சல் மருந்துகள் மூலமோ அல்லது சாதாரண ஜலதோஷத்தைப் போல் நீராவி பிடிப்பதன் மூலமோ குணமடைந்து விடலாம் என்றும் எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்தார்.
கடுமையான நோய்த் தொற்று 10 முதல் 15 சதவீதம் பேருக்குதான் ஏற்படுகிறது என்றும், ஐந்து சதவீதத்திற்கும் குறைவான நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் தேவைப்படும் நிலை உள்ளதாகவும் அவர் கூறினார்.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!