India
“கொரோனாவா... உள்ளேயே கிடங்க” - வீட்டைப் பூட்டிய பக்கத்து வீட்டுக்காரர் : ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!
ஆந்திர மாநிலம் நெல்லூரில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டுக்குள் வைத்து சக குடியிருப்புவாசிகள் பூட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்த இருவர் 10 நாட்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்துகொண்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதால் இருவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த வீட்டிலிருந்த அவர்களது மகன், கடந்த திங்கட்கிழமையன்று வெளியே சென்று பெற்றோருக்குத் தேவையான மருந்துகளை வாங்கி வந்துள்ளார். இதனையறிந்த அண்டைவீட்டுக்காரர்கள் மூவரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டியுள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கல் கதவைத் திறக்கும்படியும், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று அவர்கள் கெஞ்சியும் யாரும் திறக்க முன்வரவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து, போலிஸாரை போனில் அழைத்து நிலைமையை விளக்கியதையடுத்து போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து பூட்டை அகற்றியதோடு, குடியிருப்புவாசிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டை சட்டவிரோதமாக பூட்டியதற்காக எதிர் பிளாட் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
நீட் தேர்வு ரத்து - “நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
”நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-விற்கு சிக்கல்... தவெக எம்.எல்.ஏ-வுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை!”
-
“பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்” : பேரவை தலைவர், துணைத் தலைவருக்கு தி.மு.க தலைவைர் வாழ்த்து!
-
“திமுக என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்”: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசம் : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் த.வெ.க-வினர்!