India
“கொரோனாவா... உள்ளேயே கிடங்க” - வீட்டைப் பூட்டிய பக்கத்து வீட்டுக்காரர் : ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!
ஆந்திர மாநிலம் நெல்லூரில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டுக்குள் வைத்து சக குடியிருப்புவாசிகள் பூட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்த இருவர் 10 நாட்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்துகொண்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதால் இருவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த வீட்டிலிருந்த அவர்களது மகன், கடந்த திங்கட்கிழமையன்று வெளியே சென்று பெற்றோருக்குத் தேவையான மருந்துகளை வாங்கி வந்துள்ளார். இதனையறிந்த அண்டைவீட்டுக்காரர்கள் மூவரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டியுள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கல் கதவைத் திறக்கும்படியும், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று அவர்கள் கெஞ்சியும் யாரும் திறக்க முன்வரவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து, போலிஸாரை போனில் அழைத்து நிலைமையை விளக்கியதையடுத்து போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து பூட்டை அகற்றியதோடு, குடியிருப்புவாசிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டை சட்டவிரோதமாக பூட்டியதற்காக எதிர் பிளாட் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!