India
மிரட்டும் கொரோனா... அச்சத்தில் மக்கள் : தடுப்பு நடவடிக்கை எடுப்பதில் மோடி அரசு தயக்கம் காட்டுவது ஏன்!
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நீடித்து வரும் கொரோனா தொற்று பரவல் கடந்த மாதம் வரை தணிந்து காணப்பட்டது. தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்களை மீண்டும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
அதன்படி நாடு முழுவதும் கடந்த 10 நாட்களாக கொரோனா தினசரி தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அவ்வகையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிதாக 64 ஆயிரத்து 258 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,19,08,10 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதைப் போல் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 291 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,61,240 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் பதிவாகி வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 50 சதவீதம் தெற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 36 ஆயிரத்து 902 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கை முதல்வர்உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். அதேபோல் பஞ்சாப்,கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Also Read
-
“இவர்களெல்லாமா அமைச்சர்கள்.. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்..” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சூளுரை!
-
“இதையெல்லாம் செய்யணும்.. இல்லைனா பட்ஜெட் கூட்டத்தின்போது...” - தவெக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!
-
தூய்மை பணியாளரை இழிவு படுத்தும் தவெக... கண்டுகொள்ளாத காவல்துறை.. தொடரும் கொடுமைகள்!
-
மகளிர் டி20: யாருக்கு உலகக் கோப்பை.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. தட்டிப்பறிக்குமா இங்கிலாந்து!
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!