India
விவசாயிகள் போராட்டம்: சுப்ரீம் கோர்ட் அமைத்த குழுவில் இருந்து விலகினார் கிசான் தலைவர் பூபீந்தர் சிங்!
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட குழுவில் இருந்து பூபிந்தர் சிங் என்பவர் வெளியேறியுள்ளார்.
இவர் பாரதிய கிசான் யூனியன் தலைவராக உள்ளார். இவர் உள்பட 4 உறுப்பினர்களும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேசி வந்ததாக விவசாயிகள் புகார் எழுப்பியிருந்தனர். ஆகவே இந்த குழுவின் முன்னதாக விவசாயிகள் கருத்துக்களை தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தனர்.
இந்த சூழ்நிலையில் தான் இந்த குழுவில் இடம் பெற்றிருந்த பூபிந்தர் சிங் மான் வெளியேறி இருக்கிறார். உச்சநீதிமன்றம் அமைத்த 4 பேர் குழுவில் இருந்து தற்போது ஒருவர் வெளியேறியதன் காரணமாக இந்த குழு மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
வரும் திங்கட்கிழமை குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்துவதற்கு தடைகோரி மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. அப்போது இந்த குழு தொடர்பாக உச்ச நீதிமன்றம் புதிய முடிவினை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!
-
குறைதீர் முகாமில் தவெக அமைச்சர் ரமேஷ் முன் அடாவடி.. கேள்வி கேட்டவர் ஃபோனை பிடிங்கி விரட்டியடிப்பு!
-
‘வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம்.. தவெக அமைச்சர்கள் மீது DVAC-க்கு பறந்த புகார் மனு’ : திமுக அதிரடி!
-
துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி… பாஜக-வுக்கு பணியும் தவெக : திமுக எம்.பி. வில்சன் கண்டனம்!
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?