India
விவசாயிகள் போராட்டம்: சுப்ரீம் கோர்ட் அமைத்த குழுவில் இருந்து விலகினார் கிசான் தலைவர் பூபீந்தர் சிங்!
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட குழுவில் இருந்து பூபிந்தர் சிங் என்பவர் வெளியேறியுள்ளார்.
இவர் பாரதிய கிசான் யூனியன் தலைவராக உள்ளார். இவர் உள்பட 4 உறுப்பினர்களும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேசி வந்ததாக விவசாயிகள் புகார் எழுப்பியிருந்தனர். ஆகவே இந்த குழுவின் முன்னதாக விவசாயிகள் கருத்துக்களை தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தனர்.
இந்த சூழ்நிலையில் தான் இந்த குழுவில் இடம் பெற்றிருந்த பூபிந்தர் சிங் மான் வெளியேறி இருக்கிறார். உச்சநீதிமன்றம் அமைத்த 4 பேர் குழுவில் இருந்து தற்போது ஒருவர் வெளியேறியதன் காரணமாக இந்த குழு மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
வரும் திங்கட்கிழமை குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்துவதற்கு தடைகோரி மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. அப்போது இந்த குழு தொடர்பாக உச்ச நீதிமன்றம் புதிய முடிவினை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!