India
விவசாயிகள் போராட்டம்: சுப்ரீம் கோர்ட் அமைத்த குழுவில் இருந்து விலகினார் கிசான் தலைவர் பூபீந்தர் சிங்!
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட குழுவில் இருந்து பூபிந்தர் சிங் என்பவர் வெளியேறியுள்ளார்.
இவர் பாரதிய கிசான் யூனியன் தலைவராக உள்ளார். இவர் உள்பட 4 உறுப்பினர்களும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேசி வந்ததாக விவசாயிகள் புகார் எழுப்பியிருந்தனர். ஆகவே இந்த குழுவின் முன்னதாக விவசாயிகள் கருத்துக்களை தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தனர்.
இந்த சூழ்நிலையில் தான் இந்த குழுவில் இடம் பெற்றிருந்த பூபிந்தர் சிங் மான் வெளியேறி இருக்கிறார். உச்சநீதிமன்றம் அமைத்த 4 பேர் குழுவில் இருந்து தற்போது ஒருவர் வெளியேறியதன் காரணமாக இந்த குழு மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
வரும் திங்கட்கிழமை குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்துவதற்கு தடைகோரி மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. அப்போது இந்த குழு தொடர்பாக உச்ச நீதிமன்றம் புதிய முடிவினை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“Comeback கொடுப்பதில் நாம் Specialist.. புதுமுகங்களுக்கு பொறுப்பு” : செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!