India
“புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை” - மத்திய நிபுணர் குழுவினர் தகவல்!
இங்கிலாந்தில் பரவியுள்ள புதிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 75 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 111 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் 2,92,518 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நிபுணர் குழுவினர் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், “நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த பயணிகளின் பட்டியலைச் சேகரித்து அவர்களுக்கு கட்டாயம் கொரோனா சோதனை செய்ய மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்படுள்ளது.
அதில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மாதிரியை புனேவிலுள்ள தேசிய வைரஸ் ஆய்வகத்துக்கு அடுத்த கட்ட சோதனைக்கு அனுப்பவேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.
நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் பேசுகையில், “இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா குறித்து, அங்குள்ள ஆராய்ச்சி நிறுவனத்துடன் பேசியுள்ளோம். இங்கிலாந்தில் பரவியுள்ள புதிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை.
உருமாற்றம் பெற்ற வைரஸ் வேகமாகப் பரவுகிறது என்பதை புரிந்துகொண்டோம். தற்போது உருவாக்கப்படும் தடுப்பூசி முயற்சிகளில் இது பாதிப்பை ஏற்படுத்தாது” என்று தெரிவித்தார்.
Also Read
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!