India
"வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவையே”- வாபஸ் பெற வலியுறுத்தி பொருளாதார நிபுணர்கள் அரசுக்கு கடிதம்!
நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 10 பொருளாதார வல்லுநர்கள், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் எனக் குறிப்பிட்டு அதற்கான காரணங்களோடு வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் தீர ஆய்வு செய்ததில், இச்சட்டங்கள் விவசாயிகளின் நலன்களை காக்கும் வகையில் இல்லை. சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு எதிரான வகையிலேயே இருக்கின்றன என அக்கடிதத்தில் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், நாட்டின் சிறு விவசாயிகள் பயனடைய வேண்டுமெனில் விவசாயிகளின் வருமானம் உயர வேண்டுமெனில் வேளாண் பொருட்களின் விற்பனை சந்தையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது. எனினும் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்களில் அதற்கான எந்த அம்சங்களும் இல்லை.
வேளாண் சந்தையை ஒழுங்குபடுத்துவதில் மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கும் வகையில் இந்தசட்டங்கள் உள்ளன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சந்தைகளை கொண்டு வருவது சிறு விவசாயிகளின் நலனைப் பாதிக்கும்.
ஒப்பந்த விவசாயத்தில் சிறு விவசாயிகளுக்கு எதிராக பெரு நிறுவனங்கள் களமிறங்கும்.மாநில அரசு விதிமுறைகளின் கட்டுப்பாடுகளுக்குள் பெரு நிறுவனங்கள் வரும் வகையில் சட்டங்கள் இல்லாததால், வேளாண் சந்தையில் பெரு நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கம் அதிகரிக்கும்.
இவ்வாறான காரணங்களை குறிப்பிட்டு விவசாயிகளின் நலனை பாதிக்கும் இந்த வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என அக்கடிதத்தில் பொருளாதார வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
தமிழ்நாட்டு விவசாயிகளின் உற்ற தோழனா மோடி அரசு? பாஜகவின் பொய்களும், அதன் உண்மை விளக்கமும் - முழு விவரம்!
-
சென்னையில் 700 அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மாளிகை, அச்சகம் ஆகியவை திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“உங்கள் கனவு நிறைவேறிவிட்டது! இனி மக்களின் கனவுகளை நிறைவேற்ற புறப்படுங்கள்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!
-
“இதுதான் மாற்றம்! இதுதான் வளர்ச்சி! திராவிட மாடல் 2.O-ல் இது பன்மடங்காகும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மருத்துவப் படிப்பில் Sports Quota... MBBS, BDS இட ஒதுக்கீட்டை அதிகரித்து அரசு அனுமதி.. - விவரம் உள்ளே!