India
50% இடஒதுக்கீடு அரசாணை வழக்கு : தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை!
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு படிப்புகளில் சேர்வதற்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கையை அடுத்து தமிழக அரசு அதனை அரசாணையாக வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சில மருத்துவ மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. கேவியட் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். அப்போது தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதுதொடர்பாக தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Also Read
-
“Online, Offline இண்டிலும் தி.மு.க தான் Lion என்று காட்டுவோம்!” : IT Wing கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!