India
50% இடஒதுக்கீடு அரசாணை வழக்கு : தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை!
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு படிப்புகளில் சேர்வதற்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கையை அடுத்து தமிழக அரசு அதனை அரசாணையாக வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சில மருத்துவ மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. கேவியட் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். அப்போது தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதுதொடர்பாக தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Also Read
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
தீபாவளி பண்டிகை : சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் - கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்!