India
புதிய தளர்வுகள் ஏதுமில்லை... கொரோனா ஊரடங்கு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு! #Unlock 6.0
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதியிலிருந்து முதல் 40 நாள்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.
அதன்பிறகு, அதன் தொடர்ச்சியாக மாதாமாதம் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனவே தற்போது பெரும்பாலான செயல்பாடுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மெட்ரோ ரயில் சேவை, மால்கள் உள்ளிட்டவை கடந்த மாதம் முதலே கட்டுப்பாடுகளுடன் செயல்பாட்டு வருகிறது. இன்னும் 3 தினங்களில் இந்த மாதத்திற்கான ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் தற்போது unlock 6.0வின் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊரடங்கு அறிவிப்பில், செப்டம்பர் 30-ம் தேதி அறிவிக்கப்பட்ட தளர்வுகள் அப்படியே நவம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் இந்தமுறை புதிய தளர்வுகள் ஏதும் கிடையாது என்றும் அன்லாக் 6.0 தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Also Read
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!