India
புதிய தளர்வுகள் ஏதுமில்லை... கொரோனா ஊரடங்கு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு! #Unlock 6.0
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதியிலிருந்து முதல் 40 நாள்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.
அதன்பிறகு, அதன் தொடர்ச்சியாக மாதாமாதம் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனவே தற்போது பெரும்பாலான செயல்பாடுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மெட்ரோ ரயில் சேவை, மால்கள் உள்ளிட்டவை கடந்த மாதம் முதலே கட்டுப்பாடுகளுடன் செயல்பாட்டு வருகிறது. இன்னும் 3 தினங்களில் இந்த மாதத்திற்கான ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் தற்போது unlock 6.0வின் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊரடங்கு அறிவிப்பில், செப்டம்பர் 30-ம் தேதி அறிவிக்கப்பட்ட தளர்வுகள் அப்படியே நவம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் இந்தமுறை புதிய தளர்வுகள் ஏதும் கிடையாது என்றும் அன்லாக் 6.0 தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Also Read
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாட்டிய தயாநிதி மாறன் MP!