India
மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு : பஞ்சாப் மாநில பா.ஜ.க-வின் பொதுச் செயலாளர் பதவி விலகல் !
நாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி மத்திய மோடி அரசாங்கம் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள வேளாண் சட்டம் இந்திய விவசாயத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக இருப்பதாகவும், அந்த சட்டங்களை நிறைவேற்ற வேண்டாம் என பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள பஞ்சாப் விவசாயிகளால் அம்மாநிலமே போராட்டக்களமாக மாறியுள்ளது. மேலும், பா.ஜ.க அரசிற்கு எதிராக கடும் எதிர்ப்புகள் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், அம்மாநில பா.ஜ.க நிர்வாகிகள் பலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.க அரசுக்கு எதிராக போர் கொடித் தூக்கியுள்ளனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் மாநிலத்தின் முக்கிய பா.ஜ.க நிர்வாகிகள் கலந்துக்கொண்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பஞ்சாப் மாநில பா.ஜ.கவின் பொதுச்செயலாளர் மால்விந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பா.ஜ.கவின் மத்திய நிர்வாகியாவும், பஞ்சாப் மாநில பா.ஜ.க.வின் பொதுச்செயலாளருமாக இருந்து வந்த மால்விந்தர் சிங், தனது பதவியை ராஜினாமா செய்வதாக கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, மால்விந்தர் சிங் எழுதியுள்ள ராஜினாமா கடித்ததில், “விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்கள் குறித்து பல முறை எதிர்த்தும், எச்சரிக்கையும் விடுத்துவிட்டேன். ஆனால், அதற்கு உரிய மதிப்பும், பதில்களும் கிடைக்காத நிலையில், விவசாயிகளுக்காக தான் வகித்து வந்த கட்சியின் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்படும் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க தவறிய பா.ஜ.க தலைமைக்கு எதிராக பஞ்சாப் மாநில பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ச்சியாக தங்கள் பதவியை ராஜினாமா செய்வது, பா.ஜ.கவுக்குப் பெரும் பின்னடை தற்போது ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“Online,Offline இரண்டிலும் தி.மு.க தான் Lion என்று காட்டுவோம்!” : IT Wing கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!