India
NEET: தவறவிட்ட மாணவர்களுக்கு அக்.,14ல் தேர்வு.. அக்., 16ல் தேர்வு முடிவுகள்!
நாட்டில் கொரோனா பரவல் தீவிரமான நிலையில் இருந்த போதும் கடந்த செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வை நடத்தியது மத்திய அரசு.
அதில் , கொரோனா தொற்று பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மற்ற பகுதிகளைச் சேர்ந்த மாணாக்கர்கள் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நீட் தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் வருகிற அக்டோபர் 16ம் தேதி வெளியிடப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதி மற்றும் ஊரடங்கு போன்ற பல்வேறு காரணங்களால் நீட் தேர்வு எழுதாமல் தவறவிட்ட மாணவர்களுக்கு நாளை மறுநாள் (அக்டோபர் 14) தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உரிய பாதுகாப்புகளுடன் தவறவிட்டவர்களுக்கு தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!