India
மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க தலைமையில் போராட்டம்!
விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் வகையில் மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் இதற்கு துணைபோன ஆளும் அ.தி.மு.க அரசைக் கண்த்தும் இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து, மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தாமல் - குரல் வாக்கெடுப்பு என்ற பெயரில் ‘சர்வாதிகார’மாக நடந்துள்ள மத்திய பாஜக அரசைக் கண்டித்து சென்னையில் செப்டம்பர் 21 திங்களன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தோழமைக்கட்சிகள் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எதிரானதும் - வேளாண்மை முன்னேற்றத்திற்குப் பின்னடைவைத் தரக்கூடியதும் - கூட்டாட்சித் தத்துவத்திற்குப் புறம்பானதுமான மூன்று சட்டங்களுக்கும், தமிழக அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் எதிர்ப்பை தெரிவித்தது.
செப்டம்பர் 28 அன்று காலை 10 மணி அளவில் மாவட்டத் தலைநகரங்களிலும் நகராட்சி மற்றும் ஒன்றியங்களிலும் “கொரோனா” பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் மூலம், மசோதா சட்டமாவதை தடுப்பதற்கு இருந்த ஒரே வாய்ப்பும் பறிபோனதால் நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?