India
கொரோனாவில் இருந்து முதியோர்களை காக்க மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? - உச்ச நீதிமன்றம் கேள்வி!
பல மாநிலங்களில் கொரொனா காலத்திலும் கூட சரியாக முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முதியோருக்கான ஓய்வூதியத்தை தடையில்லாமல் வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கடந்த மாதம் உத்தரவிட்டனர்.
மேலும், முதியோருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், முகக்கவசம், சானிடைசர் போன்றவற்றை வழங்க வேண்டும். முதியோர் இல்லங்களில் பாதுகாப்பு கவசங்கள் வழங்கவும், தினமும் கிருமினாசினி தெளித்து சுத்தமாக வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இதனிடையே இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகையை தடுக்க சிலர் சூழ்ச்சி செய்தார்கள்.. ஆனால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!
-
மக்களின் பேராதரவோடு... 100 தொகுதிகளை நெருங்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை !
-
அருவருக்கத்தக்க பேச்சு.. திமுக பெண் MP-க்கள் முதல் திரிஷா வரை.. நயினார் நாகேந்திரனுக்கு குவியும் கண்டனம்!
-
“உயர்கல்வித்துறை சார்பில் ரூ.542.02 கோடியில் புதிதாக 15 கட்டடங்கள் திறப்பு!” : முழு விவரம் உள்ளே!