India
“ ‘சிங்கம்’ போன்ற படங்களை பார்த்து பெருமை கொள்ளாதீர்கள்” - இளம் IPS அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
தெலங்கானாவின் ஐதராபாத்தில் உள்ல சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலிஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் இன்று (செப்.,5) பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
அப்போது, காவல்துறை சீருடை அணிவது குறித்து தாங்கள் அனைவரும் பெருமை கொள்ளவேண்டும். மாறாக, அதன் மீதான அதிகாரத்தினை எப்படி பயன்படுத்திக் கொள்வது என நினைக்கக் கூடாது.
சிங்கம் போன்ற போலிஸ் கதைக் கொண்ட படங்களை பார்த்ததும் புதிதாக பணியில் சேரும் காவல்துறையினர் எவரும் போலிஸை கண்டு பயப்பட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. இதன் மூலம் பணிகள் புறக்கணிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க வேண்டும்.
சாமானிய மக்களிடம் காவல்துறையினர் கனிவுடனும் எளிமையாகவும் பழக வேண்டும். காக்கிச் சட்டைக்கான மரியாதையை இழந்துவிடக் கூடாது. பணி சார்ந்த மன அழுத்தங்கள் ஏற்பட்டால் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என கூறிய பிரதமர் மோடி கொரோனா ஊரடங்கு நேரத்தில் காவல்துறையினர் ஆற்றிய பணிக்கு பாராட்டு தெரிவித்தார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!