India
32 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு: ஒரே மாதத்தில் 15 லட்சம் பேருக்கு தொற்று.. அன்லாக் 4 தேவைதானா?
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் 32 லட்சத்து 34 ஆயிரத்து 475 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதில், 24 லட்சத்து 67 ஆயிரத்து 758 பேர் குணமடைந்திருந்தாலும் 59 ஆயிரத்து 449 பேர் கொரொனா தொற்றால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் வேதனையை அளித்துள்ளது. மேலும், சிகிச்சையில் மட்டுமே 7 லட்சத்து 7,267 பேர் உள்ளனர்.
இப்படி இருக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 67 ஆயிரத்து 151 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, ஒரே நாளில் 63 ஆயிரத்து 173 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆயினும் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 59 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
இதனையடுத்து ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே 15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக நகரங்களை விட கிராமப்பகுதிகளிலேயே இந்த மாதத்தில் கூடுதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பாதிப்பு அதிகமாக உள்ள 584 மாவட்டங்களில் பெரும்பான்மையும் உள்மாவட்டங்கள் என்று தெரியவந்துள்ளது. இதில் 345 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கிறது.
இதனிடையே புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய அன்லாக் 4 அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளது. பள்ளி, கல்லூரிகள் தவிர்த்து மற்ற துறைகளில் கூடுதல் தளர்வுகளை அனுமதிக்க மத்திய உள்துறை ஆலோசனைகளை நடத்திவருகிறது.
Also Read
-
சமூக நீதிக்காவலர் வே.ஆனைமுத்து புகைப்படக் கண்காட்சி… நலத்திட்ட உதவிகள் வழங்கினார் துணை முதலமைச்சர்!
-
250 சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
TNPSC-ல் தேர்வான 292 பேருக்கு பணி நியமன ஆணை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
மக்கள் பணியில் மகத்தான 5 ஆண்டுகள் (2021-26) சாதனை மலர் வெளியீடு! : முழு விவரம் உள்ளே!
-
திராவிட மாடலில் 2 டைடல் மற்றும் 16 நியோ டைடல் பூங்காக்கள் திறப்பு! : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!