India
6 நாட்களாக தொடர்ந்து ஏறும் பெட்ரோல் - டீசல் விலை : கண்டுகொள்ளாமல் மக்களை வதைக்கும் மத்திய மாநில அரசுகள்!
பெட்ரோல் விலை யாரும் கவனிக்கப்படாமலேயே பெருநகரங்களில் ஏறிக்கொண்டே செல்கின்றன. ஆகஸ்ட் 25-ம் தேதி வரை மட்டும் தொடர்ந்து ஆறு நாட்கள் பெட்ரோல் விலை ஏறியுள்ளது.
அரசு நடத்தும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் அறிக்கையின் படி ஆகஸ்ட் 25-ம் தேதி காலை 6 மணிக்கான நிலவரத்தின்படி, டெல்லி, சென்னை, மும்பை , கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய பெருநகரங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 9 முதல் 11 பைசாக்கள் வரை ஏறியுள்ளது. ஆனால் டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 84.73 ரூபாயில் உள்ளது. டீசல் விலை ஒரு லிட்டர் 78.86 பைசாவில் உள்ளது. டெல்லியைப் பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 81.73 பைசாவும், டீசல் விலை ரூபாய் 73.56 பைசாவுமாக உள்ளது.
மும்பை நகரைப் பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 88.39 பைசாவாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 80.11 பைசாகவும் உள்ளது.
இந்தியாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களே அதிக அளவிலான பெட்ரோல் பங்குகளை வைத்துள்ளன. அவையே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!