India
“தேச வரலாற்றில் இவ்வளவு பலவீனமான பிரதமரை நாடு கண்டதில்லை” : ஜோதிமணி எம்.பி குற்றச்சாட்டு!
இந்திய - சீனா எல்லையில் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் உள்ள காந்தி சிலை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி 1 மணி நேரம் மவுன அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி ஜோதிமணி, “சீனாவுக்கு எதிராக களத்தில் நிற்கவேண்டியவர் இந்திய பிரதமர் தற்போது ஓடி ஒளிந்து கொள்கிறார். காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் எங்கே? என தேடி கண்டுபிடித்த வெளியே கொண்டுவரும் நிலைக்கு மோடி இருப்பது வேதனையளிக்கிறது. தேச வரலாற்றில் இவ்வளவு பலவீனமான பிரதமரை நாடு கண்டதில்லை.
இந்திய நட்பு நாடான நேபாளம் இந்திய பகுதிகளை நேபாளத்தின் பகுதிகள் என அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அந்த அளவு மோசமான நிலைக்கு நாட்டை தள்ளி விட்டார். எதிர் நாடுகளின் படைகளைக் கண்டு அஞ்சி நிற்கின்ற பிரதமரை நாடு கண்டதில்லை. இது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது” என குற்றம் சாட்டியுள்ளார்.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!