India
“தேச வரலாற்றில் இவ்வளவு பலவீனமான பிரதமரை நாடு கண்டதில்லை” : ஜோதிமணி எம்.பி குற்றச்சாட்டு!
இந்திய - சீனா எல்லையில் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் உள்ள காந்தி சிலை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி 1 மணி நேரம் மவுன அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி ஜோதிமணி, “சீனாவுக்கு எதிராக களத்தில் நிற்கவேண்டியவர் இந்திய பிரதமர் தற்போது ஓடி ஒளிந்து கொள்கிறார். காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் எங்கே? என தேடி கண்டுபிடித்த வெளியே கொண்டுவரும் நிலைக்கு மோடி இருப்பது வேதனையளிக்கிறது. தேச வரலாற்றில் இவ்வளவு பலவீனமான பிரதமரை நாடு கண்டதில்லை.
இந்திய நட்பு நாடான நேபாளம் இந்திய பகுதிகளை நேபாளத்தின் பகுதிகள் என அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அந்த அளவு மோசமான நிலைக்கு நாட்டை தள்ளி விட்டார். எதிர் நாடுகளின் படைகளைக் கண்டு அஞ்சி நிற்கின்ற பிரதமரை நாடு கண்டதில்லை. இது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது” என குற்றம் சாட்டியுள்ளார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!