India
“இதுவரை 10 பேர் தற்கொலை; கொரோனா மேலும் வாழ்க்கையை மோசமாக்கியுள்ளது” : BSNL ஒப்பந்த ஊழியர்கள் ஆதங்கம்!
பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஓராண்டுக் காலமாக வழங்காமல் உள்ள சம்பள நிலுவை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்துயுள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் வினோத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற் பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பி.எஸ்.என்.எல் அலுவலகங்களில் பல்வேறு பணிகளுக்கு அங்கீக ரிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்களின் மூலமாக பணியாற்றி வருகின்றனர்.
ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த ஒரு வருடமாகச் சம்பளத்தை பி.எஸ்.என்.எல் நிர்வாகம் வழங்காமல் உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் 30 விழுக்காடு சம்பளத்தை வழங்க உத்தரவிட்டும் நிர்வாகம் முழுமையாக அமல்படுத்தவில்லை.
இதனால் ஒப்பந்த ஊழியர் குடும்பங்கள் பரிதவித்து வருகின்றன. இதுவரை நாடு முழுவதும் 10 ஒப்பந்த ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் 5 ஆயிரத்திற் கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்க ளும் அதிகாரிகளும் விருப்ப ஓய்வில் சென்றுவிட்டனர்.
இந்த பின்புலத்தில் கூடுதலான பணிச்ச சுமைகளோடும் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் தங்கு தடையற்ற சேவையை வழங்க ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று காரணமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வியலை மேலும் மோசமாக்கியுள்ளது.
இதனையும் மீறி கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் தேச நலனுக்காக பணியாற்றி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலைக் கணக்கில் கொண்டு ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!