India
“17 வெளிநாட்டினர் உட்பட 85 பேருக்கு கொரோனா பாதிப்பு” : மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கோவிட்-19 எனும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளில் பரவி மக்களை நாள்தோறும் அச்சுறுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் 4,500-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
குறிப்பாக, நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டும் வருகின்றன.
ஆனாலும் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, கேரளாவில் மேலும் 3 பேருக்கு கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு இருப்பது இரண்டு நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் அந்த மாநிலத்தில் கோவிட்-19 காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருந்தது. இதனையடுத்து தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்ததால், ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 85 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. இதில் 17 பேர் வெளிநாட்டினர். 68 பேர் இந்தியர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!