India
“அரசின் திட்டங்களை தொழில்துறையினருடன் இணைக்க முயற்சி எடுத்தீர்களா?” : மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி!
நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை தி.மு.க எம்.பிக்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
அந்தவகையில் மக்களவையில் இன்றைய கூட்டத்தில் பேசிய தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசுகையில், அரசின் திட்டங்களை, தொழில் துறையினருடனும், கல்வியாளர்களிடமும் இணைக்கும் வகையில் ஏதேனும் முன் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஸ்வர்த்தனிடம் கேள்வி எழுப்பினார்.
தொழில் துறையில் புதிய உத்திகளை நிறைவேற்றவும் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், புதிய வணிக நிறுவனங்களை துவக்குபவர்களுக்கு தேவையான உதவிகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செய்து வருவதாகவும், இதன் மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான முயற்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவற்றை செயல்படுத்த 25 தொழில்நுட்ப முன்முயற்சி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டாக்டர் ஹர்ஸ்வர்த்தன் மக்களவையில், டி.ஆர்.பாலு எம்.பி கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ளார்.
Also Read
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!