India
“செல்போன் கட்டணங்கள் 10 மடங்கு அதிகரிக்கும்?” - நிதி ஆயோக் CEO அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி!
மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கான கட்டணங்களை நிர்ணயிப்பது குறித்து, அந்தந்த நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
பா.ஜ.க அரசின் ஆதரவோடு தொலைத்தொடர்புத் துறையில் களமிறங்கிய ஜிடோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து பிற நிறுவனங்களையும் நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கியது.
கடுமையான போட்டி காரணமாக ஒவ்வொரு நிறுவனமும் செல்போன் கட்டணங்களை வெகுவாகக் குறைத்து தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை பெறவும் முயற்சித்து வந்தன.
இதையடுத்து, தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக, கட்டண விவகாரத்தில் அரசு தலையிட வேண்டும் என தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்தன.
இதுகுறித்து பரிசீலித்த நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், “தொலைபேசி அழைப்புகள் மற்றும் மொபைல் டேட்டாக்களுக்கு, தொலைபேசி நிறுவனங்கள் குறைந்தபட்ச அடிப்படை விலை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, தொலைபேசி கட்டணங்கள், தற்போதைய விலையை விட 5 முதல் 10 மடங்கு உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் மிஸ்டு கால்களுக்கும் கட்டணம் வசூலிக்க பரிசீலனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
வோடஃபோன் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களை ஜியோ நிறுவனம் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ஜியோவின் திட்டமே எனக் குற்றம்சாட்டப்படுகிறது.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!