India
“மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாய்களாகப் பிறப்பார்கள்” - சாமியாரின் அருவருக்கத்தக்க பேச்சு!
குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் ஸ்ரீ சுவாமிநாராயண் கோவில் அறக்கட்டளையின் கீழ் இயங்குகிறது ஸ்ரீ சகஜானந்த் மகளிர் கல்வி நிறுவனம். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் தங்களின் மாதவிடாய் காலங்களில் கல்லூரி வளாகத்தில் உள்ள கோவில், உணவகம் போன்ற பகுதிகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அங்கு விடுதியில் தங்கியிருக்கும் பெண்களில் மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் யார் என்பதை அறிய அங்கு தங்கியிருந்த 68 பெண்களின் உள்ளாடைகள் நீக்கப்பட்டு அப்பெண்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்தக் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, இதுதொடர்பாக மாணவியர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, கல்லூரி முதல்வர் உள்ளிட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஸ்ரீ சுவாமி நாராணன் கோவிலைச் சேர்ந்த சுவாமி க்ருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜி என்பவர் மாதவிடாய் குறித்து அருவருக்கத்தக்க வகையில் எப்போதோ சொற்பொழிவாற்றிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
அதில், “மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமைத்த உணவை உண்டால் ஆண்கள் அடுத்த பிறவியில் காளை மாடுகளாகப் பிறப்பார்கள். மாதவிடாய் நாள்களில் கணவருக்காக உணவு சமைத்தால் பெண்கள் நிச்சயம் அடுத்த பிறவியில் பெண் நாய்களாகத்தான் பிறப்பார்கள்.
மாதவிடாய் நாட்கள் என்பது தவமிருப்பது போன்றது என்பதைப் பெண்கள் உணரமாட்டார்கள். இவையனைத்தும் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.” எனப் பேசியுள்ளார் அவர். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !