India
இனி ஆன்லைனிலும் வாக்களிக்கலாம் : சென்னை ஐஐடியுடன் இணைந்து தேர்தல் ஆணையம் ஆய்வு!
வெளியூரில் இருந்தாலும், ஆன்லைன் மூலம் வாக்களிப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க சென்னை ஐஐடியுடன் இணைந்து தேர்தல் ஆணையம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் தாங்கள் பணி செய்யும் இடங்களில் இருந்தே வாக்குகளை பதிவு செய்யும் வகையில் மின்னணு தபால் மூலம் வாக்களிக்கும் முறை கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் 62 சதவிகித வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் வெளியூரில் பணிபுரியும் வாக்காளர்கள் தங்களது சொந்த தொகுதிகளுக்கோ, வாக்குச்சாவடிகளுக்கோ செல்லாமல் வாக்குகளை பதிவு செய்ய புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வர தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. இதற்காக சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்துடன் இணைந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் படி முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தங்கள் பகுதியில் உள்ள தேர்தல் ஆணைய இ-சேவை மையங்களுக்கு சென்று இணைய முகவரி மற்றும் கைரேகையை முறையாக பதிவு செய்த பின் ஆன்லைன் மூலம் வாக்களிக்கலாம்.
மின்னணு வாக்குச்சீட்டில் பதிவாகும் வாக்குகள் ஹேஷ்டேக் மூலம் பதிவு செய்யப்பட்டு தேர்தல் ஆணைய இணையதளத்தில் இடம் பெறும். ஆய்வுகள் முடிந்து அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டு உரிய விதிகள் மூலம் இந்த புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்த தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.
Also Read
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!