India
இனி ஆன்லைனிலும் வாக்களிக்கலாம் : சென்னை ஐஐடியுடன் இணைந்து தேர்தல் ஆணையம் ஆய்வு!
வெளியூரில் இருந்தாலும், ஆன்லைன் மூலம் வாக்களிப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க சென்னை ஐஐடியுடன் இணைந்து தேர்தல் ஆணையம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் தாங்கள் பணி செய்யும் இடங்களில் இருந்தே வாக்குகளை பதிவு செய்யும் வகையில் மின்னணு தபால் மூலம் வாக்களிக்கும் முறை கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் 62 சதவிகித வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் வெளியூரில் பணிபுரியும் வாக்காளர்கள் தங்களது சொந்த தொகுதிகளுக்கோ, வாக்குச்சாவடிகளுக்கோ செல்லாமல் வாக்குகளை பதிவு செய்ய புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வர தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. இதற்காக சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்துடன் இணைந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் படி முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தங்கள் பகுதியில் உள்ள தேர்தல் ஆணைய இ-சேவை மையங்களுக்கு சென்று இணைய முகவரி மற்றும் கைரேகையை முறையாக பதிவு செய்த பின் ஆன்லைன் மூலம் வாக்களிக்கலாம்.
மின்னணு வாக்குச்சீட்டில் பதிவாகும் வாக்குகள் ஹேஷ்டேக் மூலம் பதிவு செய்யப்பட்டு தேர்தல் ஆணைய இணையதளத்தில் இடம் பெறும். ஆய்வுகள் முடிந்து அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டு உரிய விதிகள் மூலம் இந்த புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்த தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!