India
ஆழமான சதிவலைகளால் அரசியலமைப்பு பின்னப்படுகிறது : சோனியா காந்தி எச்சரிக்கை!
குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார் சோனியா காந்தி. அதில், “தனிப்பட்ட பாரபட்சங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டின் அரசியல் அமைப்பையும், அதன் மாண்புகளையும் காக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். தற்போதைய ஆட்சியில் அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமைகள் பாதுகாப்பாக இல்லை என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
இதனை காப்பாற்ற வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு என்றும் தெரிவித்துள்ளார். மக்களிடையே, இன, மத, பிராந்திய அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தி, அரசியல் சட்டத்தை சீர்குலைப்பதற்காக மிக ஆழமான சதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை செயல்படுத்த, நாட்டின் அனைத்து அரசியல் சாசன அமைப்புகளும் சீரழிக்கப்பட்டு வருகிறது.
பொருளாதார சீர்குலைவுகள், நிர்வாகக் கோளாறுகள், ஏற்றுக் கொள்ள முடியாதாக அளவுக்கான வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற அரசின் தோல்விகளில் இருந்து மக்களை திசைதிருப்பும் நடவடிக்கைகளே இவை” என்று சோனியா காந்தி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்