India
ஹைட்ரோகார்பன் திட்டத்தை முன்னின்று தடுப்போம்; அதற்காக எந்த விளைவையும் சந்திக்கத் தயார்- நாராயணசாமி அதிரடி
ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைக்க சுற்றுச்சூழல் துறை அனுமதியும் பொதுமக்களின் கருத்துக் கேட்பும் தேவையில்லை என திருத்தப்பட்ட அறிக்கையை மத்திய அரசு அரசிதழில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசே தடுத்து நிறுத்தும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தபோதே இந்த திட்டத்தை புதுச்சேரியில் அனுமதிக்க மாட்டோம் என பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பினோம்.
அதன்பிறகு, ஜூன் 10ம் தேதி உள்துறை அமைச்சருக்கு ஒரு கடிதமும், ஜூலை 20ம் தேதி ஹைட்ரோகார்பனுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் அனுப்பி வைத்தோம். இதன் மூலம் மாநில அரசு அனுமதி கொடுக்காது என்பதை உறுதிபட பல முறை தெரிவித்துவிட்டேன்.
ஆனால், தற்போது 2 நாட்களுக்கு முன்பாக மத்திய அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை. வேதாந்தா நிறுவனம் நேரடியாக பணியைத் துவங்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அரசிதழிலும் சுற்றுச்சூழல் அனுமதியும் தேவையில்லை, பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டமும் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி அரசின் இந்த நடவடிக்கை சர்வாதிகாரப் போக்கை காட்டுகிறது.
குறிப்பாக, மாநில அரசின் உரிமையைப் பறித்து, மக்கள் கருத்துக்கு நேர்மாறாக மத்திய அரசு நடந்து கொள்கிறது. வடமாநிலங்களில் செயல்படுத்தாத இந்த திட்டங்களை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படுத்த நினைக்கிறார்கள். இதனை எந்தக் காலத்திலும் அனுமதிக்க முடியாது.
அப்படி மீறி செயல்படுத்த நினைத்தால், மாநில அரசே முன்னின்று தடுத்து நிறுத்தும். இதற்காக எந்த விளைவுகளையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். தேவைப்பட்டால் மத்திய அரசுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருக்கிறோம். இதையெல்லாம் வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!