India
2020-ன் முதல் நாளில் 67000 குழந்தைகள் பிறப்பு - உலகளவில் இந்தியா முதலிடம்!
2020ம் ஆண்டின் புத்தாண்டு தினத்தன்று உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகள் குறித்த விவரங்களை ஐ.நாவின் யுனிசெஃப் அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2020ம் ஆண்டின் முதல் குழந்தை பசிபிக் பெருங்கடலில் இருக்கும் பிஜி தீவிலும், கடைசிக் குழந்தை அமெரிக்காவிலும் பிறந்துள்ளது. மேலும் 8 நாடுகளில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 78 குழந்தைகள் புத்தாண்டு அன்று பிறந்துள்ளன.
இந்த பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதிகபட்சமாக இந்தியாவில் மட்டும் 67,385 குழந்தைகள் பிறந்துள்ளன என யுனிசெஃப் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதேபோல, சீனாவில் 46,299 , நைஜீரியாவில் 26,039 , பாகிஸ்தானில் 16,787 , இந்தோனேசியாவில் 13,020 , அமெரிக்காவில் 10,452 குழந்தைகள் பிறந்துள்ளன. மேலும், காங்கோ, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1ம் தேதி அன்று குழந்தை பிறப்பதை பலரும் அதிர்ஷ்டம் என நம்புகின்றனர். இதனால் பெரும்பாலானோர் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பெற்றெடுக்கின்றனர் எனவும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!