India
#CAA : "பெரும்பான்மை இருப்பதற்காக நினைத்ததை எல்லாம் செய்வது சரியல்ல" - பிரணாப் முகர்ஜி தாக்கு!
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. மாணவர்கள், எதிர்க்கட்சிகள் என அனைத்து தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தேசிய பிரச்னையாக மட்டுமல்லாமல் உலகம் முழுதும் இந்த பா.ஜ.கவின் குடியுரிமை சட்டம் தொடர்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற வாஜ்பாய் நினைவு சொற்பொழியில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றிருந்தார்.
அப்போது குடியுரிமை சட்டம் தொடர்பாக பேசிய அவர், “தேர்தலில் பெரும்பான்மை கிடைத்திருக்கலாம். ஆனால் பெரும்பான்மை மக்கள் ஒரு அரசியல் கட்சியை எப்போதும் ஆதரித்ததில்லை. பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. இவ்வாறு நினைப்பவர்களை மக்கள் தண்டித்துள்ளார்கள்.” எனக் கூறியுள்ளார்.
Also Read
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!
-
ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!
-
“இந்த மசோதாவால் நாடாளுமன்ற ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படும்” - பாஜக அரசுக்கு திருமாவளவன் கண்டனம்!