India
#CAA : "பெரும்பான்மை இருப்பதற்காக நினைத்ததை எல்லாம் செய்வது சரியல்ல" - பிரணாப் முகர்ஜி தாக்கு!
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. மாணவர்கள், எதிர்க்கட்சிகள் என அனைத்து தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தேசிய பிரச்னையாக மட்டுமல்லாமல் உலகம் முழுதும் இந்த பா.ஜ.கவின் குடியுரிமை சட்டம் தொடர்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற வாஜ்பாய் நினைவு சொற்பொழியில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றிருந்தார்.
அப்போது குடியுரிமை சட்டம் தொடர்பாக பேசிய அவர், “தேர்தலில் பெரும்பான்மை கிடைத்திருக்கலாம். ஆனால் பெரும்பான்மை மக்கள் ஒரு அரசியல் கட்சியை எப்போதும் ஆதரித்ததில்லை. பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. இவ்வாறு நினைப்பவர்களை மக்கள் தண்டித்துள்ளார்கள்.” எனக் கூறியுள்ளார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!