India
“மோடியின் நண்பர்களுக்கு விற்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்” : சோனியா காந்தி சாடல்!
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் நாடாளுமன்ற எம்.பி-க்கள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, “மத்திய அரசு பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா உள்ளிட்ட லாபம் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களை விற்க முடிவு எடுத்துள்ளது.
குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்கள் பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்பட்டு வருகின்றன. பா.ஜ.க ஆட்சியில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி நாடாளுமன்றத்தில் உரக்கப் பேசவேண்டும்.
மேலும், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பா.ஜ.க மிகவும் வெட்கக்கேடான முயற்சிகளை மேற்கொண்டது. ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவின் அரசியல் தலைவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஆனால் சில ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இது நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் வெட்கக்கேடான செயலாகும்” என்று கடுமையாக விமர்சித்தார்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!