India
“மோடியின் நண்பர்களுக்கு விற்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்” : சோனியா காந்தி சாடல்!
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் நாடாளுமன்ற எம்.பி-க்கள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, “மத்திய அரசு பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா உள்ளிட்ட லாபம் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களை விற்க முடிவு எடுத்துள்ளது.
குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்கள் பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்பட்டு வருகின்றன. பா.ஜ.க ஆட்சியில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி நாடாளுமன்றத்தில் உரக்கப் பேசவேண்டும்.
மேலும், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பா.ஜ.க மிகவும் வெட்கக்கேடான முயற்சிகளை மேற்கொண்டது. ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவின் அரசியல் தலைவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஆனால் சில ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இது நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் வெட்கக்கேடான செயலாகும்” என்று கடுமையாக விமர்சித்தார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!