India
சாலை விபத்தால் இந்தியாவில் 5 ஆண்டுகளில் இத்தனை உயிரிழப்புகளா? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
நாடு முழுவதும் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் இயக்குவது போன்றவற்றால் சாலை விபத்துகளும் அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகையை அதிகரித்த போதிலும், விபத்துகள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், இந்தியா முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக ஆய்வின் மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் 4 லட்சத்து 67 ஆயிரத்து 44 சாலை விபத்துகளில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 417 பேர் பலியாகியதாகவும், 2017ல் 4 லட்சத்து 64 ஆயிரம் சாலை விபத்துகளில் 1 லட்சத்து 47 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!
-
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
எழுச்சியுடன் நடந்த திமுக முப்பெரும் விழா.. விருதுகளை வழங்கி சிறப்பித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
Dummy முதலமைச்சரின் ஆட்சியில் காற்றில் பறக்கும் சட்டம் - ஒழுங்கு : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சாடல்!