India
சாலை விபத்தால் இந்தியாவில் 5 ஆண்டுகளில் இத்தனை உயிரிழப்புகளா? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
நாடு முழுவதும் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் இயக்குவது போன்றவற்றால் சாலை விபத்துகளும் அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகையை அதிகரித்த போதிலும், விபத்துகள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், இந்தியா முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக ஆய்வின் மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் 4 லட்சத்து 67 ஆயிரத்து 44 சாலை விபத்துகளில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 417 பேர் பலியாகியதாகவும், 2017ல் 4 லட்சத்து 64 ஆயிரம் சாலை விபத்துகளில் 1 லட்சத்து 47 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
கூட்டாட்சியின் குரலை நெரிக்கும் தொகுதி மறுவரையறை : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி எதிர்ப்பு!
-
விஜய் தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த போராட்டக் களம் வந்துள்ளார்? : நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி!
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய பாஜக அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
-
”குறையும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்.. பாகுபாடு காட்டும் பாஜக” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!