India
சாலை விபத்தால் இந்தியாவில் 5 ஆண்டுகளில் இத்தனை உயிரிழப்புகளா? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
நாடு முழுவதும் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் இயக்குவது போன்றவற்றால் சாலை விபத்துகளும் அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகையை அதிகரித்த போதிலும், விபத்துகள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், இந்தியா முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக ஆய்வின் மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் 4 லட்சத்து 67 ஆயிரத்து 44 சாலை விபத்துகளில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 417 பேர் பலியாகியதாகவும், 2017ல் 4 லட்சத்து 64 ஆயிரம் சாலை விபத்துகளில் 1 லட்சத்து 47 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?