India
"பெண் எம்.பிக்களை வலுக்கட்டாயமாகப் பிடித்துத் தள்ளிய அவைக்காவலர்கள்” - காங்கிரஸ் குற்றச்சாட்டு!
மகாராஷ்டிர அரசியலில் பல்வேறு குழப்பங்களுக்கிடையே பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் திடீரென பதவியேற்றனர்.
மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சி அமைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா-தேசியவாத காங்.-காங்கிரஸ் கட்சிகள் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் மீது 2வது நாளாக இன்று விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநில அரசியல் விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதால் கடும் அமளி ஏற்பட்டது.
ஜனநாயகத்தைக் காப்போம், அரசியலமைப்புச் சட்டத்தை கொலை செய்யாதீர்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி அவையின் மையப்பகுதிக்கு வந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
அப்போது அங்கிருந்த ஜோதிமணி எம்.பி., கேரளாவை சேர்ந்த எம்.பி ரம்யா ஹரிதாஸ் இருவரையும் வலுக்கட்டாயமாகப் பிடித்து அவைக் காவலர்கள் தள்ளினார்கள் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
பின்னர் பெண் எம்.பிகளிடம் அவமரியாதையாக நடந்து கொண்ட விதம் குறித்து சோனியா காந்தி பெண் எம்.பி.களை சபாநாயகரிடம் அழைத்துச் சென்று புகார் அளித்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறுகையில், " என்னையும், ரம்யா ஹரிதாஸையும் அவைக் காவலர்கள் பிடித்துத் தள்ளினார்கள். இதுகுறித்து அவைத் தலைவரிடம் புகார் செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!