India
“முதலில் பொருளாதாரத்தை உயர்த்துங்கள்; பிறகு வங்கிகளை உலகத் தரத்துக்கு உயர்த்தலாம்”- கனிமொழி எம்.பி சாடல்!
தி.மு.க. சார்பில் தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க எம்.பி கனிமொழி, இந்திய வங்கிகளின் தரத்தை உயர்த்துவதற்கு முன்பு இந்திய பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் மத்திய அரசு இந்திய தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி அமைத்திருப்பது ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய துரோகம். எந்த கட்சி வெற்றி பெற்றாலும், நாங்கள்தான் ஆட்சியமைப்போம் என சர்வாதிகார போக்கில் பா.ஜ.க செயல்பட்டு வருகிறது என கனிமொழி கூறினார்.
மேலும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு முதுநிலை மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு இல்லாமல் செய்துவிட்டு, பொதுப்பிரிவினருக்கு மத்திய அரசு இடஒதுக்கீடு அறிவித்துள்ளது. இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் தி.மு.க சார்பில் நிச்சயம் குரல் எழுப்புவோம் என உறுதியளித்தார்.
Also Read
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல் வேலைவாய்ப்பு வரை... முதலீடுகள் செயலாக்க மாநாட்டில் நிகழ்ந்தது என்ன?
-
ரூ.62.5 கோடியில் UPSC தேர்வுப் பயிற்சி மையக் கட்டடம், செயலி... அறிமுகப்படுத்துகிறார் முதலமைச்சர்!