India
“முதலில் பொருளாதாரத்தை உயர்த்துங்கள்; பிறகு வங்கிகளை உலகத் தரத்துக்கு உயர்த்தலாம்”- கனிமொழி எம்.பி சாடல்!
தி.மு.க. சார்பில் தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க எம்.பி கனிமொழி, இந்திய வங்கிகளின் தரத்தை உயர்த்துவதற்கு முன்பு இந்திய பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் மத்திய அரசு இந்திய தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி அமைத்திருப்பது ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய துரோகம். எந்த கட்சி வெற்றி பெற்றாலும், நாங்கள்தான் ஆட்சியமைப்போம் என சர்வாதிகார போக்கில் பா.ஜ.க செயல்பட்டு வருகிறது என கனிமொழி கூறினார்.
மேலும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு முதுநிலை மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு இல்லாமல் செய்துவிட்டு, பொதுப்பிரிவினருக்கு மத்திய அரசு இடஒதுக்கீடு அறிவித்துள்ளது. இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் தி.மு.க சார்பில் நிச்சயம் குரல் எழுப்புவோம் என உறுதியளித்தார்.
Also Read
-
"கழக அரசின் சாதனைகளை, மக்களை ஞாபகப்படுத்திக் கொண்டே இருங்கள்"... துணை முதலமைச்சர் உதயநிதி வேண்டுகோள் !
-
தெற்கு ரயில்வேயின் அலட்சியத்தால் பறிபோன 3 உயிர்கள்... கேட்டை மூடாதது யார் தவறு? - முரசொலி விமர்சனம் !
-
"வள்ளுவரை திருடப்பார்க்கிறர்கள், வள்ளுவரின் வெப்பம் அவர்களை பொசுக்கிவிடும்" - முதலமைச்சர் ஆவேசம் !
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!