India
“முதலில் பொருளாதாரத்தை உயர்த்துங்கள்; பிறகு வங்கிகளை உலகத் தரத்துக்கு உயர்த்தலாம்”- கனிமொழி எம்.பி சாடல்!
தி.மு.க. சார்பில் தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க எம்.பி கனிமொழி, இந்திய வங்கிகளின் தரத்தை உயர்த்துவதற்கு முன்பு இந்திய பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் மத்திய அரசு இந்திய தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி அமைத்திருப்பது ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய துரோகம். எந்த கட்சி வெற்றி பெற்றாலும், நாங்கள்தான் ஆட்சியமைப்போம் என சர்வாதிகார போக்கில் பா.ஜ.க செயல்பட்டு வருகிறது என கனிமொழி கூறினார்.
மேலும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு முதுநிலை மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு இல்லாமல் செய்துவிட்டு, பொதுப்பிரிவினருக்கு மத்திய அரசு இடஒதுக்கீடு அறிவித்துள்ளது. இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் தி.மு.க சார்பில் நிச்சயம் குரல் எழுப்புவோம் என உறுதியளித்தார்.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?