India
அரபிக் கடலில் உருவானது ‘க்யார்’ புயல்... கனமழைக்கு வாய்ப்பிருக்கிறதா?
வடகிழக்கு அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ‘க்யார்’ புயலாக வலுப்பெற்றுள்ளது.
வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகவும் அடுத்த ஐந்து நாட்களில் ஓமன் நோக்கி செல்லும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மும்பை மற்றும் கோவா மாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து விட்டது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் பதிவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Also Read
-
‘பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே மீது இனவெறி தாக்குதல்.. பராகுவேவின் இழி மனநிலையா? குவியும் கண்டனங்கள்’
-
‘மிரட்டும் வயநாடு மண்சரிவு.. உயரும் பலி எண்ணிக்கை.. அடுத்த 24 மணி நேரம்..’ - வானிலை மையம் எச்சரிக்கை!
-
20 ஆண்டுகால கனவு நொறுங்கியது... கண்ணீருடன் முடிந்த உலகக் கோப்பை; ரொனால்டோ என்ற உணர்வின் கதை!
-
“அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. பள்ளிக்குழந்தைகளுக்கு அவமானம்” : கழக மகளிர் அணி கண்டனம்!
-
“வாக்குறுதியை நிறைவேற்றாத தவெக.. விவசாயிகளை ஏமாற்றினால்.. நீடிக்க முடியாது” : திமுக விவசாய அணி கண்டனம்!