India
அரபிக் கடலில் உருவானது ‘க்யார்’ புயல்... கனமழைக்கு வாய்ப்பிருக்கிறதா?
வடகிழக்கு அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ‘க்யார்’ புயலாக வலுப்பெற்றுள்ளது.
வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகவும் அடுத்த ஐந்து நாட்களில் ஓமன் நோக்கி செல்லும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மும்பை மற்றும் கோவா மாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து விட்டது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் பதிவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Also Read
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!