India
மிகவும் மாசடைந்த நகரங்களில் முதலிடம் பெற்ற மோடியின் தொகுதி!
இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் மாசடைந்த நகரமாக காற்றின் தர அட்டவணையில் 276 புள்ளிகள் பெற்று உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசி முதலிடம் பெற்றுள்ளது.
வாரணாசி பிரதமர் மோடி இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். வாரணாசியை தொடர்ந்து லக்னோ இரண்டாவது இடத்தையும் முசாஃபர் நகர், ஹரியாணாவின் யமுனா நகர் 3,4 முறையே இடத்தில் உள்ளது.
மேலும், தீபாவளி பண்டிகையின் போது வெடிக்கப்படும் பட்டாசு புகையால் வாரணாசி உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் மாசு அளவு மிக அபாய கட்டத்தை தாண்ட வாய்ப்புள்ளதாகவும் மாசுக்கப்பட்டு வாரியத்தை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் சுகாதாரத்தை வலியுறுத்தி வரும் பிரதமர் மோடியை இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்த வாரணாசி நகரம் தொடர்ந்து மாசடைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காற்றின் மாசு அளவு அதிகரித்துள்ள நிலையில் அதன் தீவிரத்தை குறைக்க விரைந்து பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!