India
மிகவும் மாசடைந்த நகரங்களில் முதலிடம் பெற்ற மோடியின் தொகுதி!
இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் மாசடைந்த நகரமாக காற்றின் தர அட்டவணையில் 276 புள்ளிகள் பெற்று உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசி முதலிடம் பெற்றுள்ளது.
வாரணாசி பிரதமர் மோடி இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். வாரணாசியை தொடர்ந்து லக்னோ இரண்டாவது இடத்தையும் முசாஃபர் நகர், ஹரியாணாவின் யமுனா நகர் 3,4 முறையே இடத்தில் உள்ளது.
மேலும், தீபாவளி பண்டிகையின் போது வெடிக்கப்படும் பட்டாசு புகையால் வாரணாசி உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் மாசு அளவு மிக அபாய கட்டத்தை தாண்ட வாய்ப்புள்ளதாகவும் மாசுக்கப்பட்டு வாரியத்தை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் சுகாதாரத்தை வலியுறுத்தி வரும் பிரதமர் மோடியை இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்த வாரணாசி நகரம் தொடர்ந்து மாசடைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காற்றின் மாசு அளவு அதிகரித்துள்ள நிலையில் அதன் தீவிரத்தை குறைக்க விரைந்து பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Also Read
-
“நான்காம் ஆண்டில் திராவிட மாடல் அரசு - சாதனை முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின்” : முரசொலி!
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!