India
பாக்கெட் பாலில் பூச்சிக்கொல்லி மருந்து; 37.7% பால் தரமற்றவை - உணவு பாதுகாப்புத் துறை ஆய்வில் அதிர்ச்சி!
நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 37.7% பால் மாதிரிகள், நிர்ணயிக்கப்பட்ட தர விதிமுறைகளை பின்பற்றவில்லை என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் வரை பால் பாக்கெட்டுகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டது FSSAI. இந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 1103 நகரங்களில் 6,432 தனியார் மற்றும் அரசு பால் நிறுவனங்களில் இருந்து பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த ஆய்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள், பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும் மருந்துகள், Aflatoxin M1 என்ற வேதிப்பொருள் அதிகம் இருந்தது கண்டறியப்பட்டது.
குறிப்பாக டெல்லி, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் விநியோகிக்கப்படும் பால் பாக்கெட்டுகளில் அதிக அளவில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
Also Read
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... மவுனம் காக்கும் தவெக அரசு; விளாசிய உதயநிதி ஸ்டாலின்!
-
“திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயமா?; தவெக அரசு வேடிக்கைப் பார்க்கலாமா?”: ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
சிங்கப்பெண் அதிரடிப்படையில் தேர்வான பெண் காவலருக்கு டார்ச்சர்? - இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார்!
-
”கூடிய ’GenZ DMK’ கொள்கைக் கூட்டம்.. தைரியமாக களமாடுங்கள் திமுக உங்களுடன் என தெம்பூட்டிய கழக சட்டத்துறை”
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!