India
பசுவதை பெயரில் வன்முறை ; வட மாநிலங்களில் குறைந்த பசு வளர்ப்பு : கால்நடை கணக்கெடுப்பில் தகவல்!
பசுவதை என்ற பெயரில் நடத்தப்படும் தாக்குதலால் ஏற்படும் அதிக உயிரிழப்பு காரணமாக உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை பசு வளர்ப்பது குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து பசுவின் பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டு பலர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் பசு வளர்ப்பதே ஆபத்தான தொழிலாக மாறிவிட்டது.
இதன் காரணமாக வடமாநிலங்களில் பசு வளர்ப்பது குறைந்துவிட்டதாக கால்நடை கணக்கெடுப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2012ம் ஆண்டில் 1 கோடியே 96 லட்சமாக இருந்த பசுக்களின் எண்ணிக்கை தற்போது 1 கோடியே 88 லட்சமாகவும், ஒடிசாவில் 15 சதவிகிகதமும், மகாராஷ்டிராவில் 10.7 சதவிகிதமும், மத்திய பிரதேசத்தில் 4.42 சதவிகிதகமாகவும் குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா கும்பல் வன்முறையில் ஈடுபடுவதால் பசு வளர்ப்பு குறைந்துள்ளது. பசு வளர்ப்பையே தொழிலாக கொண்டவர்கள் இது போன்ற வன்முறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!