India
பசுவதை பெயரில் வன்முறை ; வட மாநிலங்களில் குறைந்த பசு வளர்ப்பு : கால்நடை கணக்கெடுப்பில் தகவல்!
பசுவதை என்ற பெயரில் நடத்தப்படும் தாக்குதலால் ஏற்படும் அதிக உயிரிழப்பு காரணமாக உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை பசு வளர்ப்பது குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து பசுவின் பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டு பலர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் பசு வளர்ப்பதே ஆபத்தான தொழிலாக மாறிவிட்டது.
இதன் காரணமாக வடமாநிலங்களில் பசு வளர்ப்பது குறைந்துவிட்டதாக கால்நடை கணக்கெடுப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2012ம் ஆண்டில் 1 கோடியே 96 லட்சமாக இருந்த பசுக்களின் எண்ணிக்கை தற்போது 1 கோடியே 88 லட்சமாகவும், ஒடிசாவில் 15 சதவிகிகதமும், மகாராஷ்டிராவில் 10.7 சதவிகிதமும், மத்திய பிரதேசத்தில் 4.42 சதவிகிதகமாகவும் குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா கும்பல் வன்முறையில் ஈடுபடுவதால் பசு வளர்ப்பு குறைந்துள்ளது. பசு வளர்ப்பையே தொழிலாக கொண்டவர்கள் இது போன்ற வன்முறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!