India
பசுவதை பெயரில் வன்முறை ; வட மாநிலங்களில் குறைந்த பசு வளர்ப்பு : கால்நடை கணக்கெடுப்பில் தகவல்!
பசுவதை என்ற பெயரில் நடத்தப்படும் தாக்குதலால் ஏற்படும் அதிக உயிரிழப்பு காரணமாக உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை பசு வளர்ப்பது குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து பசுவின் பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டு பலர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் பசு வளர்ப்பதே ஆபத்தான தொழிலாக மாறிவிட்டது.
இதன் காரணமாக வடமாநிலங்களில் பசு வளர்ப்பது குறைந்துவிட்டதாக கால்நடை கணக்கெடுப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2012ம் ஆண்டில் 1 கோடியே 96 லட்சமாக இருந்த பசுக்களின் எண்ணிக்கை தற்போது 1 கோடியே 88 லட்சமாகவும், ஒடிசாவில் 15 சதவிகிகதமும், மகாராஷ்டிராவில் 10.7 சதவிகிதமும், மத்திய பிரதேசத்தில் 4.42 சதவிகிதகமாகவும் குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா கும்பல் வன்முறையில் ஈடுபடுவதால் பசு வளர்ப்பு குறைந்துள்ளது. பசு வளர்ப்பையே தொழிலாக கொண்டவர்கள் இது போன்ற வன்முறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!