India
“மோடியின் புதிய முழக்கம் ஜெய் ஹிந்த் அல்ல, ஜியோ ஹிந்த்” : தேர்தல் பிரச்சாரத்தில் யெச்சூரி சாடல்!
மராட்டியம், அரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பால்கர் மாவட்டத்தின் தஹானு தொகுதியில் சிபிஐ(எம்) வேட்பாளர் வினோத் நிகோலுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அந்த பிரச்சாரத்தில் பேசிய யெச்சூரி, “நாட்டையும் அதன் குடிமக்களையும் காப்பாற்ற பா.ஜ.க மற்றும் சிவசேனா தோற்கடிக்கப்பட வேண்டும். பா.ஜ.க தலைமையிலான அரசின் பொருளாதார சரிவு, அரக்கமயமாக்கலால் நாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை” எதிர்கொண்டு வருகிறது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு உதவுவதற்காக அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவற்றை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் “ஜெய் ஹிந்த்” முழக்கத்திற்கு பதிலாக, பிரதமர் நரேந்திர மோடியின் புதிய முழக்கம் “ஜியோ ஹிந்த்” ஆகிவிட்டது” என யெச்சூரி சாடியுள்ளார்.
Also Read
-
“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!
-
பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் அவலம் - உயிருக்குப் போராடிய கணவர்: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!