India
“மோடியின் புதிய முழக்கம் ஜெய் ஹிந்த் அல்ல, ஜியோ ஹிந்த்” : தேர்தல் பிரச்சாரத்தில் யெச்சூரி சாடல்!
மராட்டியம், அரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பால்கர் மாவட்டத்தின் தஹானு தொகுதியில் சிபிஐ(எம்) வேட்பாளர் வினோத் நிகோலுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அந்த பிரச்சாரத்தில் பேசிய யெச்சூரி, “நாட்டையும் அதன் குடிமக்களையும் காப்பாற்ற பா.ஜ.க மற்றும் சிவசேனா தோற்கடிக்கப்பட வேண்டும். பா.ஜ.க தலைமையிலான அரசின் பொருளாதார சரிவு, அரக்கமயமாக்கலால் நாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை” எதிர்கொண்டு வருகிறது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு உதவுவதற்காக அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவற்றை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் “ஜெய் ஹிந்த்” முழக்கத்திற்கு பதிலாக, பிரதமர் நரேந்திர மோடியின் புதிய முழக்கம் “ஜியோ ஹிந்த்” ஆகிவிட்டது” என யெச்சூரி சாடியுள்ளார்.
Also Read
-
இளைஞர்களுக்கு ஜாக்பாட்... ரூ.119.06 கோடி மதிப்பீட்டில் 3 புதிய டைடல் நியோ பூங்காக்கள் - முழு விவரம்!
-
ஜப்பான் நிறுவனம், கலிஃபோர்னியா பல்கலை., பெர்க்லியோடு ஒப்பந்தம்… அரசின் அதிரடி மூவ் - முழு விவரம்!
-
ம.தி.மு.க-வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு... உதயசூரியன் சின்னத்தில் போட்டி - முழு விவரம் உள்ளே!
-
ஈரான்-இஸ்ரேல் போரால் சிக்கித் தவிக்கும் தமிழர்கள், உடனடி நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
தமிழ்நாட்டு விவசாயிகளின் உற்ற தோழனா மோடி அரசு? பாஜகவின் பொய்களும், அதன் உண்மை விளக்கமும் - முழு விவரம்!