India
“மோடியின் புதிய முழக்கம் ஜெய் ஹிந்த் அல்ல, ஜியோ ஹிந்த்” : தேர்தல் பிரச்சாரத்தில் யெச்சூரி சாடல்!
மராட்டியம், அரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பால்கர் மாவட்டத்தின் தஹானு தொகுதியில் சிபிஐ(எம்) வேட்பாளர் வினோத் நிகோலுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அந்த பிரச்சாரத்தில் பேசிய யெச்சூரி, “நாட்டையும் அதன் குடிமக்களையும் காப்பாற்ற பா.ஜ.க மற்றும் சிவசேனா தோற்கடிக்கப்பட வேண்டும். பா.ஜ.க தலைமையிலான அரசின் பொருளாதார சரிவு, அரக்கமயமாக்கலால் நாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை” எதிர்கொண்டு வருகிறது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு உதவுவதற்காக அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவற்றை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் “ஜெய் ஹிந்த்” முழக்கத்திற்கு பதிலாக, பிரதமர் நரேந்திர மோடியின் புதிய முழக்கம் “ஜியோ ஹிந்த்” ஆகிவிட்டது” என யெச்சூரி சாடியுள்ளார்.
Also Read
-
“கிண்டியில ஒருத்தர் நமக்காக பிரச்சாரத்தை தொடங்கிட்டாரு..” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல!
-
ஜி.டி.நாயுடு பாலம் : மோடிக்கு நன்றியா? - போலி பிரசாரம் செய்யும் பாஜக... அம்பலப்படுத்திய TN Fact Check!
-
“தமிழ்நாடு இரத்ததானத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது!” : தேசிய இரத்த தான நாளில் அமைச்சர் மா.சு பேச்சு!
-
“10,000 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ககன்தீப் சிங் தகவல்!
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!