India
கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தால் வாழ்நாள் சிறை : வருகிறது ஆயுதங்களுக்கான சட்டத்திருத்த மசோதா
ஆயுதங்களுக்கான சட்டத்திருத்த வரைவு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. அதில், சட்டவிரோதமாக ஆயுதங்களை கடத்துவது, நிகழ்ச்சி கொண்டாட்டங்களின் போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவது, திட்டமிட்டு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது போன்ற செயல்களுக்கு தண்டனைகளை அதிகரிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆயுதங்கள் தயாரிப்பவர்களையும் புதிய சட்டத்திருத்தத்தின் கீழ் கண்காணிக்க முடியும். சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து உள்நாட்டில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை விற்பனை செய்வோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை உள்ளது. தற்போது இந்த தண்டனை காலத்தை 14 ஆண்டுகளாக உயர்த்த புதிய சட்டத்திருத்தம் வகை செய்கிறது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் ஆயுதங்களுக்கான சட்டத்திருத்த புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Also Read
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!