India
கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தால் வாழ்நாள் சிறை : வருகிறது ஆயுதங்களுக்கான சட்டத்திருத்த மசோதா
ஆயுதங்களுக்கான சட்டத்திருத்த வரைவு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. அதில், சட்டவிரோதமாக ஆயுதங்களை கடத்துவது, நிகழ்ச்சி கொண்டாட்டங்களின் போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவது, திட்டமிட்டு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது போன்ற செயல்களுக்கு தண்டனைகளை அதிகரிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆயுதங்கள் தயாரிப்பவர்களையும் புதிய சட்டத்திருத்தத்தின் கீழ் கண்காணிக்க முடியும். சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து உள்நாட்டில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை விற்பனை செய்வோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை உள்ளது. தற்போது இந்த தண்டனை காலத்தை 14 ஆண்டுகளாக உயர்த்த புதிய சட்டத்திருத்தம் வகை செய்கிறது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் ஆயுதங்களுக்கான சட்டத்திருத்த புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Also Read
-
பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“மேற்கிலும் தி.மு.க தான் Best! இந்த எழுச்சிதான் அதற்கு உதாரணம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்... திமுக குழுவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை!
-
திராவிட மாடல் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் சாதனை... பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு பாராட்டு.. - விவரம்!
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!