India
கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தால் வாழ்நாள் சிறை : வருகிறது ஆயுதங்களுக்கான சட்டத்திருத்த மசோதா
ஆயுதங்களுக்கான சட்டத்திருத்த வரைவு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. அதில், சட்டவிரோதமாக ஆயுதங்களை கடத்துவது, நிகழ்ச்சி கொண்டாட்டங்களின் போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவது, திட்டமிட்டு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது போன்ற செயல்களுக்கு தண்டனைகளை அதிகரிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆயுதங்கள் தயாரிப்பவர்களையும் புதிய சட்டத்திருத்தத்தின் கீழ் கண்காணிக்க முடியும். சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து உள்நாட்டில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை விற்பனை செய்வோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை உள்ளது. தற்போது இந்த தண்டனை காலத்தை 14 ஆண்டுகளாக உயர்த்த புதிய சட்டத்திருத்தம் வகை செய்கிறது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் ஆயுதங்களுக்கான சட்டத்திருத்த புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Also Read
-
“கரூரில் 41 பேரைக் கொன்ற பாவத்தின் தொடர்ச்சிதான் இது” : முதல்வர் விஜயின் வஞ்ச எண்ணத்தை தோலுரித்த முரசொலி!
-
சமூகநீதித் தேரைப் பின்னுக்குத் தள்ளுவதா? : விஜய்க்கு தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி!
-
“தமிழோடு விளையாடியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” : தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை - திமுக கண்டனம்
-
ராமநாதபுரத்தில் பரபரப்பு : ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கையும் களவுமாகக் கைது!
-
”CSK நிர்வாகத்திற்கும் தோனிக்கும் பிரச்சனையா.. அஸ்வின் கிளப்பிய புதிய புயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!”